வன்னிமண் நற்பணி மன்றம்...🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹
கற்றல் வசதிக்காக துவிச்சக்கரவண்டி வழங்குதல்....
திகதி 03-04-2021
வழங்கிய இடம் - மட்டக்களப்பு மாவட்டம் , ஏறாவூர் பற்று பிரதேசம் ,செங்கலடி _2 கிராமம்.
நிதி உதவி _ எம் கரம் கோர்த்து நிற்கும் வள்ளல் திரு.சுரேஸ் குடும்பம்.
எதற்கு _ வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலிலும் தேடலிலும், அமரர்.திரு.ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் மகனான திரு.சுரேஸ் குடும்பத்தின் நிதி பங்களிப்பில் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் தாய் , தந்தையை இழந்து பாட்டியுடன் சிறு வயதிலிருந்து வாழ்ந்து வரும் மிகவும் தேவையுடைய ஒரு பாடசாலை மாணவிக்கு 03.04.2021 அன்று துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.
அதற்கான நிதி பங்களிப்பு செய்த சுரேஸ் குடும்பத்தினர்க்கு எமது மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் உதவி பெற்ற மாணவி சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளோடு அமரர் ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராரார்த்திக்கின்றோம்.
நன்றி 🙏🏼🙏🏼 தலைவர் உறுப்பினர்கள் வன்னி மண் நற்பணி மன்றம்!
No comments:
Post a Comment