Sponsor

Thursday, June 17, 2021

யாழ்.மாவட்டத்தில் 10 மாத குழந்தை மற்றும் 7 வயது சிறுவன் உட்பட 41 பேருக்கு கொரோனா

 


யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 62 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.


அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் யாழ்.மாவட்டத்தில் ,யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ,முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும் (10 மாத பெண் குழந்தையும், 07 வயது சிறுவனும் உள்ளடக்கம்)யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment