Sponsor

Tuesday, June 22, 2021

நள்ளிரவில் பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய பிள்ளையானின் முக்கியஸ்தர்

 


மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் கள்ளத்தொடர்பு காரணமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டசம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.


கல்லடி வேலூர் கள்ளத் தொடர்பு காரணமாக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருக்கும் சுபராஜ் (சுமன்) சுபராஜ் வேலூரான் என்பவர், திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருக்கின்றார்.


கல்லடி வேலூர் கள்ளத் தொடர்பு காரணமாக இவர் பெண்களுடன் தவறான உறவுகளை பேணிவருவதுடன், மதுபாணம் உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தல், இலஞ்சம் பெற்று அரச காணிகளை உரிமை மாற்றம் செய்து கொடுத்தல் என பல்வேறுபட்ட சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டவாராக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் நேற்று இரவு கல்லடி 2ம் குறுக்கில் வசித்து வரும் ஓர் திருமணமான பெண்ணுடன் இருந்த வேளை அப்பிரதேச மக்களாலும், இளைஞர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.    


தற்போது  தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராவதாக தெரிகிறது, ஆனால் அதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.

No comments:

Post a Comment