Sponsor

Wednesday, June 16, 2021

பழைய பேருந்துக்கள் கடலில் இறக்கப்பட்ட விவகாரம்; தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்...!

 


இலங்கை மீன்பிடி அமைச்சினால் கடலில் பழைய பேருந்துகள் போடப்பட்டதை கண்டித்து தமிழகம் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.


தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.


பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.


அதேபோல் நாளுக்கு நாள் உயர்ந்து டீசல் விலையால் கமீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவே மத்திய, மாநில அரசுகள் கலால்,சாலை வரிகளை நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இலங்கை மீன் வளத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் தெரிவிகப்படுக்கின்றது.    

No comments:

Post a Comment