Sponsor

Saturday, June 26, 2021

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் பலி!

 


யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.


வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.


அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 65 மற்றும் 80 வயதுடைய ஆண்கள் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.மூவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்படவுள்ளன.

No comments:

Post a Comment