கிளிநொச்சி- கண்ணகி நகர் பகுதியில் 18 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கண்ணகி கிராமத்திலுள்ள 182 பேருக்கு, கடந்த 18 ஆம் திகதி பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளபீ.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகளிலேயே 18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகளவான கொரோனா தொற்றாளர்கள், அப் பகுதியில் அடையாளம் காணப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment