பசறை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவுக்கு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவரும், பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி 71 வயது நபர், அவரது 72 வயது மனைவி மற்றும் 22 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தாயும், மகளும் சில தினங்களின் முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment