Sponsor

Friday, June 18, 2021

21ம் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தும் திட்டம் அறிவிப்பு



 நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 23ம் திகதி இரவு 10 மணி முதல் 25ம் திகதி அதிகாலை வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த காலப் பகுதியில் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.


No comments:

Post a Comment