Sponsor

Sunday, June 6, 2021

மட்டக்களப்பில் இரு குடுமபங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்..4 பேர் கைது

 


மட்டக்களப்பு- கருங்காலிச்சோலை பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 4 பேரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை குறித்த இரு குடும்பங்களிலுள்ள பெண்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த வாய்த்தர்க்கம் இரு குடும்பங்களின் ஆண்களிடையே சண்டையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இரு குடும்பங்களைச் சேர்ந்த 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment