Sponsor

Sunday, June 6, 2021

யாழ். அரசடியில் 55 பேருக்கு கொரோனா....!

 


யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் 156 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதி கடந்த மாதம் முதல் முடக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அப்பகுதியில் வசிக்கும் 156 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியை தொடர்ந்தும் முடக்க நிலையில் வைத்துக் கொண்டு, அப்பகுதி மக்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment