Sponsor

Saturday, June 12, 2021

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கேஸ் விலை உயர்வு?



 எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து மற்றுமொரு கேஸ் விலை விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.அதன்படி , சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாவில் அதிகரிக்கப்படப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வைத்திருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனினும் இதுகுறித்த முடிவை எடுப்பதற்காக அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விரைவில் முடிவு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment