விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வரும் செப்டம்பரில் பெரும்பாலும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் நாமலுடன் தற்போது மிக நெருக்கமாக உள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் , நாமல் பிரதமராக நியமிக்கப்பட்ட பின் தயாசிறிக்கு அமைச்சரவை அமைச்சு ஒன்று வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிரேஷ்ட பதவி ஒன்றும் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment