Sponsor

Thursday, June 10, 2021

ஊரடங்கு தளர்வு தொடர்பில் வெளியிட்ட செய்தி….!

 


திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிசெய்தார்.

அதற்கமைய வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பயணத்தடையை 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகிவரும் தகவலானது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment