Sponsor

Sunday, June 6, 2021

பயண தடையை மக்கள் மதிப்பதாக இல்லை: பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சாடல்!



 நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையியிலும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறையாமல் உள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

பயணத்தடையினால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சங்கத்தின் சார்பில் தலைவர் உபுல்ரோகண இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், பலர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அடுத்தவாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையலாம் என தெரிவித்துள்ள அவர் ஆனால் அது நாங்கள் எதிர்பார்த்தளவிற்கு காணப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment