Sponsor

Wednesday, June 2, 2021

கிளிநொச்சியில் தனிமையில் இருந்த முதியவர் கிணற்றில் சடலமா மீட்பு!


 

கிணற்றில் விழுந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்த முதியவர் வீட்டுக்கிணற்றிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


குறித்த நபர் வேலாயுதம் பரமேஸ்வரி என்ற 74 வயதுடைய பெண் எனவும், அவர் தனிமையில் வாழ்ந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment