Sponsor

Wednesday, July 14, 2021

நுவரெலியாவில் 109 அவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ள தாய்!

 


நுவரெலியா, கினிகத்தேன கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 6 பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது 109 பிறந்த நாளை கொண்டாட தயாராகியுள்ளார்.


1912ஆம் ஆண்டு 08ஆம் மாதம் 20ஆம் திகதி அரநாயக்க பிரதேசத்தில் பிறந்த ஜோன் நோனா என்ற பெண் தனது 16வது வயதில் திருமணம் செய்துள்ளார்.


கணவர் உயிரிழந்த பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேன பிரதேசத்தில் குடியேறியுள்ளார். மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகளின் தாயாரான அவரது மூத்த மகனுக்கு தற்போது 88 வயதாகின்றது.


தனது நான்காவது மகளுடன் வசித்து வரும் தாய்க்கு 109வது பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது 6 பிள்ளைகளையும் வளர்த்த தாயை 6 பிள்ளைகளும் தங்களால் முடிந்தளவு நன்றாக பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. '

No comments:

Post a Comment