Sponsor

Sunday, July 11, 2021

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 


யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது-28) என்பரே உயிரிழந்துள்ளார்.


தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.


அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment