Sponsor

Saturday, July 24, 2021

யாழில் திடீரென இடம்பெற்ற சுற்றிவளைப்பு...9 பேரை கைது செய்த பொலிஸார்....!

 


யாழ் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் பிரியந்த லியனகேயின் வழிகாட்டலிலும் அவரது பங்கேற்புடனும் மூத்த காவல்துறை அத்தியட்சகர் மற்றும் கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் பங்களிப்புடனும் இந்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 22,23 மற்றும் 25 வயதுடைய மூவர் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய 6 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment