Sponsor

Thursday, July 22, 2021

யாழில் சூட்டுக்காயங்களுடன் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு

 


யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நாவற்குழி பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சிப்பாய் இராணுவ சேவையில் இணைந்து 10 மாதங்கள் என தெரிய வருகிறது.

அதிக மன அழுத்தம் காரணமாக தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார்  மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments:

Post a Comment