Sponsor

Thursday, July 22, 2021

கிளிநொச்சி பிரபல வங்கி ஒன்றின் கிளையில் 6 பேருக்கு கொரோனா!

 


கிளிநொச்சி - பளை இலங்கை வங்கி கிளையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.


பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த 16 பேருக்கு நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.


இதன்போது 6 பேர் தொற்றாளர்களாக அடையளாம் காணப்பட்ட நிலையில் ஒருவருக்கு மீள் பரிசோதனை செய்யப்படவேண்டியுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை வங்கியின் பளைக் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் நால்வரும் அங்கு பயிற்சியாளர்களாக பணியாற்றும் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment