Sponsor

Monday, July 5, 2021

மன்னாரில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

 


மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமையும் (06) காலை 8 மணி தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment