Sponsor

Monday, July 5, 2021

விரைவில் சீனாவின் பகுதியை பார்ப்பதற்கு இலங்கை மக்களுக்கு அனுமதி....!

 


சீன நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி திட்டமான கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, கொழும்பு துறைமுக நகர வளாக பூங்கா மற்றும் கரையோரப் பகுதி மக்களுக்காக திறக்கப்படும்.துறைமுக நகர் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.

இப்பகுதிய சீனாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என பலராலும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.


No comments:

Post a Comment