Sponsor

Monday, July 5, 2021

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்.....!

 


பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் கூறுகையில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை திறப்பதற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

விசேடமாக பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு நாம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், அதேபோல பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment