Sponsor

Monday, June 7, 2021

தமிழர் பகுதியில் 21 வயது இளம் யுவதியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்!


 

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் 30 ஏக்கர் பகுதியில் 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. தம்பிலுவில் இளங்கோ வீதியில் பெரியம்மாவின் அரவணைப்பில் வசித்து வந்த கீர்த்திகா எனும் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யுவதியின் பெற்றோர் மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வரும் நிலையில் யுவதியும் அவரது தங்கையும் அம்மாவின் சகோதரியின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளனர் .


இன்று காலை யுவதியின் தங்கை அறையினை திறந்து பார்த்த போது தனது அக்கா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.


இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.திலகரத்ன மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

No comments:

Post a Comment