Sponsor

Monday, June 14, 2021

கிராண்ட்பாஸில் பாதாள ஹெரோயினுடன் கைதான உலக குழு உறுப்பினர் தெல்பாலாவின் மகள்....!

 


கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையின்போது , இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் ‘தெல்பாலா’என்ற அழைக்கப்பட்டு வந்த பாதாள குழு உறுப்பினரின் மகள் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் சனிக்கிழமை (12) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ‘கருப்பையா நிர்மலா’ எனப்படும் 41 வயதுடைய பெண்யே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவுக்கு தப்பிச் சென்று தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக கூறப்படும் பாதாளகுழு உறுப்பினர் கருப்பையா பாலன் எனப்படும் , ‘தெல்பாலா’ என்று அழைக்கப்பட்ட நபரின் மகளே இவர் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.


சந்தேக நபரான பெண் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment