Sponsor

Monday, June 14, 2021

யாழ் நயினாதீவு கடற்கரை கழிவுகளால் பாரிய அச்சத்தில் மக்கள்....!


 

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இவை இந்திய மருத்துவக் கழிவுகளா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வெற்று ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கடமை நிமிர்த்தம் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் சம்பவம் தொடர்பில் நாளைய தினம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment