Sponsor

Wednesday, August 4, 2021

உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் ஒருவர் படுகாயம்; கிளிநொச்சியில் சம்பவம்.....!

 


கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில்இன்று காலை உந்துருளி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த போதே குறித்த உந்துருளி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஏ9 வீதியில் தெற்கு நோக்கி பயணித்த உந்துருளி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த அறிவித்தல் பெயர் பலகையின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் உந்துருளியை செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

No comments:

Post a Comment