Sponsor

Tuesday, August 3, 2021

எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தடுப்பூசி செலுத்திய அட்டை முக்கியம்....!

 


எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை கட்டாயமாகத் தேவைப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறினார்.


தேசிய அடையாள அட்டைத் தவிர சகலரும் கொரோான தடுப் பூசி செலுத்தியமைக்கான அட்டை உடன் வைத்திருப்பது எதிர் காலத்தில் மிக முக்கியமானதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்த மறுப்போர் குறித்து பொது சுகாதார அதிகாரிகளுக்கும் மற்றும் பொலிஸ்ஸாருக்கு அறிவிக் குமாறு அஜித் ரோகண கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment