Sponsor

Monday, August 9, 2021

படுக்கையறை சுவரில் ரத்தக்கறை ... குளியலறையில் இறந்து கிடந்த இளம் பெண்....!

 


இந்தியாவின் கேரளாவில் வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் தொடர்பாக உறவினர்கள் போலீஸ் தலைவரை நாடியுள்ளனர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்தைச் சேர்ந்த தேவிகா, கழிவறையில் இறந்து கிடந்தார்.அவர் வீட்டில் கடுமையான உளவியல் துன்புறுத்தலுக்கு இலக்காகியதால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் தேவிகா, அர்ஜுனை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அர்ஜுன் தேவிகுளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சிறையில் பணிபுரிகிறார்.

இந்த நிலையில் அர்ஜுனின் சகோதரர் ஒருவரின் திருமணத்திற்கு பிறகு வீட்டில் தொடர்ந்து வாக்குவாதம் மற்றும் பிரச்சனை இருந்ததாக தேவிகா குடும்பத்தினரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேவிகா திடீரென தற்கொலை செய்து கொண்டார். ஆரம்ப விசாரணையின் போது, ​​குடியிருப்பில் ஒரு உடைந்த நாற்காலி மற்றும் படுக்கையறை சுவரில் இரத்தக் கறைகள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

ஆனால் தேவிகாவின் உடலில் எந்த காயங்களும் காணப்படவில்லை. விசாரணையின் போது, ​​இதே நிலை நீடித்தால் தான் தற்கொலை செய்வேன் என்று தேவிகா பலமுறை கூறியதாக அர்ஜுன் கூறினார்.

விசாரணையின் போது, ​​அர்ஜுன் இந்த சம்பவத்தில் தற்கொலை செய்யப்போவதாக தன்னிடம் தனது மொபைல் போனில் கூறியதாகவும், வீடு திரும்பிய பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோபத்தில் நாற்காலியை வீசி உடைத்ததாகவும் கூறினார்.

இதற்கிடையில், தேவிகாவின் உறவினர்கள் அதிகாலை 3.30 மணியளவில் தேவிகாவின் தற்கொலை பற்றி அறிந்தனர், ஆனால் அர்ஜுனின் குடும்பத்தினர் இது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடுமாறு தேவிகாவின் உறவினர்கள் காவல்துறை தலைவர் மற்றும் முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment