Sponsor

Tuesday, August 10, 2021

நாடு முடக்கப்படுமா! இதற்கான அறிவிப்பை அரசு இன்று வெளியிட்டது....!

 


நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ​நெருக்கடியைச் சமாளிக்கும் இறுதி ஆயுதமாக  வைத்திருப்பதாக அவர் கூறினார். கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது அவ்வாறான தீர்மானத்தை எந்த சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர்  தெரிவித்தார்.


மேலும், கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கு சிறந்த வழி தடுப்பூசி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை நாட்டில் ச்டுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment