Sponsor

Monday, August 9, 2021

கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த செவிலியர் மீது பாய்ந்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்! அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள்...!



 இந்தியாவில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த செவிலியரை பாலியல் துன்புறுத்திய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 ஆம் தேதி, வழக்கம் போல், ஒரு செவிலியர் இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அப்போது அதே வார்டில் இருந்த நோயாளியின் உதவியாளர் விஜயகுமார், செவிலியரை பிடித்து படுக்கையில் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதைப் பார்த்த மற்ற நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் விஜயகுமாரைப் பிடித்து அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செவிலியர் ஓங்கோல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

கொரோனா சிகிச்சை வார்டில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் விஜயகுமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


No comments:

Post a Comment