இலங்கையில் 894,000 பேருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் இதுவரையில் 894, 053 பேருக்கு இவ்வாறு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வரையில் 9,889 பேருக்கு கோவிட் தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 14,455 பேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி தொடக்கம் அரசாங்கம் அஸ்ரா சென்கா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பிரித்தானியா, இந்தியா, ரஸ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிடம் இலங்கை கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment