Sponsor

Monday, March 15, 2021

தாய் நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு வெளியாகப்போகும் மகிழ்ச்சியான தகவல்

 


வெளிநாடுகளிலிருந்து தாய் நாடு திரும்பும் தொடர்பில் இன்று திங்கள்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலத்தை ஏழு நாட்களாக குறைப்பது தொடர்பிலேயே இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்குள்ளாகும் போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் இன்று நடைபெறும் கொரோனா பரவலை தடுப்பதற்கான குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment