இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment