Sponsor

Sunday, March 28, 2021

கோவிட் தடுப்பூசிகளைப் பெற இலங்கை தீவிர முயற்சி....!

 


இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த அஸ்ரா செனெகா குப்பிகளின் முக்கிய ஏற்றுமதியை நிறுத்த இந்தியா உத்தரவிட்டதால் கோவிட் தடுப்பூசிகளைப் பெற இலங்கை தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இலங்கைக்கு 3 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி அளவைப் பெற ஃபைசர் இந்தியா மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் என்பவற்றுடன் உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தடுப்பூசி பங்கு ஆண்டின் 2 வது காலாண்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபைசர் தடுப்பூசி இலங்கையால் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள சீன சினோபார்ம் தடுப்பூசி நன்கொடையாக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 

No comments:

Post a Comment