மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை அவதானித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும் குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை அவதானித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும் குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை குறித்த குறித்த நபர் சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளதோடு, குறித்த சடலம் சிதைவடைந்து அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சடலத்திற்கு அருகில் பாதனியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment