Sponsor

Wednesday, March 24, 2021

மட்டக்களப்பில் ஐவர் கைது!



 மட்டக்களப்பு திரும்பெரும்துறை பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரி ஒருவர் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 200 மில்லிக்கிராம் ஹரோயின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு திரும்பெரும்துறை பிரதேசத்தினை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது போதைப் பொருள்களுடன் குறித்த சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர்.

அத்துடன் கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

 

No comments:

Post a Comment