Sponsor

Monday, March 22, 2021

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரவுவேளை தீப்பற்றி எரிந்த கார்!

 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டாவ மற்றும் அதுருகிரிய அதிவேக நெடுஞ்சாலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை, தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு ஒரு தீயணைப்பு வண்டி வருவதற்கு முன் கார் மோசமாக சேதமடைந்தது.

No comments:

Post a Comment