வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி அலைந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா றஞ்சனாமூர்த்தி (வயது 63) என்ற தந்தையே சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மகன் செல்வநாதன் வயது40 கடந்த 2007 ஆம் ஆண்டு தந்தைக்கு உணவு கொண்டு செல்லும் போது வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.
அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1495 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment