Sponsor

Thursday, March 18, 2021

வன்னிமண் நட்பணி மன்றத்தின் ஊடாக மிகவும் தேவையுடைய ஒரு குடும்பத்திற்கு தற்காலிக வீடு அமைத்து கொடுத்துள்ளனர்.....!

 


திகதி 17-03-2021

வழங்கிய இடம் - வவுனியா மாவட்டம் , செங்கரத்திமோட்டை கிராமம்.

நிதி உதவி _ எம் கரம் கோர்த்து நிற்கும் வள்ளல் கனடாவில் வசிக்கும் றெமிசியார் குடும்பம்.

எதற்கு _ வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலிலும் தேடலிலும், கனடாவில் வசிக்கும் றெமிசியார் அவர்களின் நிதி பங்களிப்பில் செங்கரத்திமோட்டை கிராமத்தில் மிகவும் தேவையுடைய ஒரு குடும்பத்திற்கு தற்காலிக வீடு அமைத்து அவர்களை மழை வெள்ளம், வெய்யிலிலிருந்து காப்பாற்ற தனது பிறந்தநாளான இன்றைய பொன்னான நாளில் இந்நாளை முன்னிட்டு 17.03.2021 அன்று கையளிப்பு செய்யப்பட்டது.

அதற்கான நிதி பங்களிப்பு செய்த றெமிசியார் குடும்பத்தினர்க்கு எமது மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் உதவி பெற்ற குடும்பம் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளோடு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நீடூழி வாழ இறைவனை பிராரார்த்திக்கின்றோம்.
🙏நன்றி🙏🏼
தலைவர், உறுப்பினர்கள்
வன்னி மண் நற்பணி மன்றம்!







 

No comments:

Post a Comment