Sponsor

Tuesday, March 16, 2021

தலைமன்னாரில் இடம்பெற்ற விபத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

 


தலைமன்னாரில் இன்று பேருந்தை தொடருந்து மோதிய விபத்திற்கான அதிர்ச்சிக் காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அந்த வீதியால் பயணிக்கும் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று தலை மன்னார் பகுதியில் புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியது.

இதனால் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இடம் பெற்ற போது குறித்த தனியார் பேருந்தில் 30 பேர் பயணித்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த மாணவர்கள், பயணிகள் உட்பட 25 பேர் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

எவ்வாறாயினும் பின் இருக்கையில் இருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் பலத்த காணமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.செந்தூர்பதிராஜா தெரிவித்தார்.

இதேவேளை குறித்த விபத்து இடம் பெற்ற சத்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment