இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, உயிரிழந்தோர்களின் விபரங்கள் வருமாறு,
- மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
- பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
- ஆடிகம பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment