Sponsor

Wednesday, March 24, 2021

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு

 


இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை அடுத்த மாதம் (ஏப்ரல்) 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment