பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கான்,இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தற்போது, இலங்கையை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று செவ்வாய்க்கிழமை பகல் 2 மணியளவில் அவரது விடுதியில் சந்திப்பதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது, கட்டாய ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான்கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளாரென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment