Sponsor

Friday, February 26, 2021

சட்டபீட மாணவர் மீது தாக்குதல்!

 


பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டபீட மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டமா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கடிதம் ஊடாக சட்டமா அதிபருக்கு இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.

குறித்த கடித்தத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “பொலிஸ் அதிகாரிகளினால் மனிதாபிமானமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் ஆகியன மாத்திரம் போதுமானது அல்ல.

ஆகவே, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை சம்பவம் தொடர்பான டீ அறிக்கையினை கோருவதற்கு சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா நடவடிக்கை எடுத்தமை பாராட்டத்தக்கது.

மேலும் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment