Sponsor

Sunday, February 28, 2021

வன்னிமண் நற்பணி மன்றம் மூலம் வவுனியா மாவட்டம் முத்துமாரி நகர் புளியங்குளம் கிராமத்தில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் குழாய் கிணறு அமைத்து நீர்த்தாங்கி பொருத்தபட்டது.....!

 


திகதி 28-02-2021

வழங்கிய இடம் - வவுனியா மாவட்டம் , முத்துமாரி நகர் புளியங்குளம்.

நிதி உதவி _ எம் கரம் கோர்த்து நிற்கும் வைத்திய கலாநிதி விஜயதீபன் பாலசுப்பிரமணியம் (MD) குடும்பத்தினர்.

எதற்கு _ வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் வைத்திய கலாநிதி விஜயதீபன் பாலசுப்ரமணியம் குடும்பத்தின் நிதி பங்களிப்பில் திரு திருமதி பாலசுப்பிரமணியம் தவராணி அன்னையின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வவுனியா மாவட்டம் முத்துமாரி நகர் புளியங்குளம் கிராமத்தில் பாடசாலை உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது

அந் நிகழ்வினை தொடர்ந்து குழாய் கிணறு அமைத்து நீர்த்தாங்கி பொருத்தி மோட்டார் பூட்டப்பட்டு 30 குடும்பங்களுக்கு மேல் பயன் பெறக்கூடிய வகையில் அமைக்கப்பெற்ற குடிநீர் வழங்கல் அன்னையின் திருவுருவத்திற்கு அன்னாரின் சகோதரனினால் மாலை அணிவித்து திரைநீக்கம் செய்யப்பட்டு மன்ற உறுப்பினரும் மதிப்பிற்குரிய திவாகரக் குருக்களினால் குடி நீர் வழங்கல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர், மன்ற தலைவர், மற்றும் வவுனியா மாவட்ட நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் , மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆதரவுள்ள நல் உள்ளங்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வானது மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்த மன்ற உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதற்கான நிதி பங்களிப்பு செய்த விஜயதீபன் பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர்க்கு எமது மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்! தவராணி அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.












No comments:

Post a Comment