வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இன்று (வியாழக்கிமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டு முற்றத்தில் சடலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment