விருப்பத்திற்கு மாறாக உடல்கள் தகனம் செய்யப்பட்ட சம்பவங்களிற்கு யார் பொறுப்பேற்பது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் மிகவும் கடுமையான கொள்கையை கைவிடும் அரசாங்கத்தின் முடிவை நாங்கள் வரவேற்கின்றோம்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினதும் இலங்கை நிபுணர்களினதும் கருத்தின்படி உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்வது எந்த வித விஞ்ஞான ரீதியிலான அடிப்படைகளையும் கொண்டிராத நடவடிக்கை விருப்பத்திற்கு மாறாக தகனம் செய்யப்பட்ட சம்பவங்களிற்கு யார் பொறுப்பேற்பது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment