மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தும் வாகனங்களில் இருந்து இராணுவத்தினர் பொருட்களை எடுத்துகொள்வதாக வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வருபவர்களும் விற்பனைக்காக செல்பவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக மன்னார் பிரதான பாலப்பகுதியிலும் வங்காலை, குஞ்சுக்குளம் பகுதியிலும் உள்ள சில சோதனை சாவடிகளில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விற்பனைக்காக வரும்போதும் விற்பனை முடிந்து செல்லும்போதும் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாகவும் தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இராணுவத்தினர் எடுக்கும் பொருட்களை விருப்பமின்றி அவர்களிடமே கொடுத்துவிட்டு வருவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு பாதிக்கப்பட்ட சிறு தொழில் விற்பனை முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment