நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆயுதங்களுடன் வந்த கொள்ளைக்கார கும்பல்கள் பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றது பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜம்பாராவில் உள்ள பள்ளி விடுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர்.
ஆயுதம் ஏந்தி விடுதிக்குள் நுழைந்த கொள்ளைக்கார கும்பல்கள்தான் சிறுமிகளை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் கடத்தப்படுவது புதிதல்ல. நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய கிரிமினல் கும்பல்கள் அண்மை ஆண்டுகளில் பள்ளி மாணவிகளையும், சிறுமிகளையும் கடத்தி பணம் பறிக்க முயற்சித்து வருகின்றன.
அந்நாட்டு அரசும் கொள்ளைக்கார கும்பல்களை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் தற்போது ஜம்பாராவில் அரங்கேறியுள்ள கடத்தல் சம்பவத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment